பதிவு செய்த நாள்
30 அக்2013
13:41
புதுடில்லி: புதிய பங்கு வெளியீட்டில் இறங்க இந்திய இணையதள நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. பங்கு வெளியிட்ட ஜஸ்ட் டயல் நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பங்கு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் ஜஸ்ட் டயல் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 100 கோடி டாலரை தாண்டியது. பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனம் இணையதளம் வாயிலாக திருமண ஜோடிகளை இணைக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. 1997–ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தை தொடங்கிய முருகவேல் ஜானகிராமன் அடுத்த நிதி ஆண்டில் பொதுமக்களுக்கு பங்கு வெளியிடும் திட்டத்தில் உள்ளார். இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் சுமார் ரூ.768 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் சில்லரை வணிக நிறுவனமான பிலிப்கார்ட் அண்மையில் சுமார் ரூ.983 கோடியை துணிகர முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து திரட்டியது. விரிவாக்க திட்டங்களுக்காக இந்த நிதி திரட்டப்பட்டது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.3,316 கோடியை தாண்டியுள்ளது. இந்நிறுவனம் விரைவில் புதிய பங்கு வெளியீட்டிற்கான ஆயத்தங்களை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|