பதிவு செய்த நாள்
30 அக்2013
23:58
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்றும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், 'சென்செக்ஸ்', 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில், பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்தன. இதனால், அந்நாடுகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதுவும், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், மருந்து, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொதுத்துறை மற்றும் மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 104.96 புள்ளிகள் அதிகரித்து, 21,033.97 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குசந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,086.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,937.12 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்கு களின் விலை அதிகரித்தும், விப்ரோ, ஸ்டெர்லைட், எல் அண்டு டி உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவுஅடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 30.80 புள்ளிகள் உயர்ந்து, 6,251.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,269.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,222.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|