பதிவு செய்த நாள்
05 நவ2013
00:48
புதுடில்லி: கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் இயற்கை ரப்பர் விலை மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள டயர் மற்றும் ரப்பர் பொருட்கள் துறையைச் சேர்ந்த, 59 நிறுவனங் களின் செயல்பாடு, நன்கு இருப்பதாக, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பற்றாக்குறைகடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக, இயற்கை ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் கேரளாவில், தொடர் மழைப் பொழிவால், ரப்பர் பால் வடிப்பு மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.
இந்நிலையில், பல விவசாயிகள், ரப்பர் விலை உயரும் என்ற, நிலைப்பாட்டால், இதனை விற்பனை செய்யாமல் கையிருப்பு வைத்திருந்தனர்.இதன் காரணமாக, டயர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இயற்கை ரப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, இத்துறை நிறுவனங்கள், இயற்கை ரப்பரை வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் இறக்குமதி செய்தன.இதையடுத்து, உள்நாட்டில் இயற்கை ரப்பரின் விலை சரிவடையத் துவங்கியது.இறக்குமதிஇதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் இறக்குமதி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 59 சதவீதம் அதிகரித்து, 1,79,292 டன்னாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனை சுணக்கம் கண்டதையடுத்து, டயர் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை பாதிப்புக்குள்ளானது. இயற்கை ரப்பர் விலை உயர்வும், இந்நிறுவனங்களுக்கு அதிக இடர்பாட்டை ஏற்படுத்தியது.
இச்சூழ்நிலையில், இயற்கை ரப்பரின் விலை மிகவும் குறைந்துள்ளது. இது, டயர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.டயர் தயாரிப்பில், இயற்கை ரப்பரின் பங்களிப்பு, 40 சதவீத அளவிற்கு உள்ளது. தற்போது, இயற்கை ரப்பரின் விலை (ஒரு கிலோ) 159 ரூபாயாக குறைந்துள்ளது.
இது, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத சரிவு நிலையாகும். மூன்று மாதங்களுக்கு முன்பாக, உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை, 195 ரூபாயாக இருந்தது.உலகளவில், ரப்பர் ஏற்றுமதியில், மிகப்பெரிய நாடாகத் திகழும், தாய்லாந்தில், கடந்த 2011ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை, 180 பாத் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 71 பாத்தாக சரிவடைந்துள்ளது.
தாய்லாந்துகணக்கீட்டு காலத்தில், தாய்லாந்தில் ‘ஆர்.எஸ்.எஸ்.3’ வகை ஒரு கிலோ ரப்பர் ஷீட்டின் விலை, 6.40 டாலரிலிருந்து, 2.45 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து கொச்சி ரப்பர் வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என். ராதாகிருஷ்ணண் கூறியதாவது:இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தி, அக்டோபர் முதல் ஜனவரி வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.
தற்போது, சர்வதேச சந்தையில் இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இச்சூழ்நிலையில், ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், இதன் விலை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சுங்க வரிமத்திய அரசு, ரப்பர் விலை சரிவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும், ரப்பர் மீதான சுங்க வரியை உயர்த்த வேண்டும். அல்லது ரப்பர் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ரப்பர் மீது, 20 ரூபாய் அல்லது 20 சதவீதம் என்ற அளவிற்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|