பதிவு செய்த நாள்
09 நவ2013
21:17
புதுடில்லி: சர்ச்சைக்குள்ளாகி உள்ள போயிங் நிறுவனத்தில் டிரீம்லைனர் ரக விமானங்களை அதிகம் பயன்படுத்திய விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்த ரக விமானத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு, பயணங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா 27 டிரீம்லைனர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. அதில், 9 விமானங்கள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன் 10 வது விமானமும் வந்து சேர்ந்தது. வரும் 15ம் தேதி முதல் அந்த விமானமும் சேவையில் சேர்க்கப்படுகிறது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங் கூறுகையில், 'டிரீம்லைனர் விமானத்தில் பாதுகாப்பு சம்பந்தமான எந்த கோளாறுகளும் இல்லை. டாய்லட் கிளட்ச் கோளாறு போன்றவைகள் தான் ஏற்படுகின்றன. இவற்றை, இந்தியாவிற்கே வந்து சரி செய்து கொடுக்க போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது,' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|