பதிவு செய்த நாள்
09 நவ2013
21:55
டொயோட்டா சிஇஓ அகியோ டொயோடா (Akio Toyoda) கவுரவமான சம்பளம் இல்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்த சம்பவம் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் டொயோட்டா நிறுவனரின் பேரன்தான் அகியோ டொயோட்டா. கடந்த 2009ம் ஆண்டு நிறுவனங்களின் பொறுப்புகளை தன் வசம் எடுத்துக் கொண்டு மிக திறம்பட டொயோட்டா நிறுவனத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியவர் இவர். கடந்த ஆண்டு உலகின் டாப்-5 கார் விற்பனை லிஸ்ட்டில் டொயோட்டா இடம்பெறுவதற்கான வியூகங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுத்தவர் அகிடோ. இந்த நிலையில், இவர் டொயோட்டா தலைவர் பதவியிலிருந்து விலகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் சம்பளம்தான். முன்னணி கார் நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளத்தோடு இவரது சம்பளத்தை ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இதை காரணம் காட்டியே தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|