பதிவு செய்த நாள்
11 நவ2013
00:46
நாமக்கல்:வட மாநிலங்களில் குளிர் காலம் துவங்கியுள்ளதால், முட்டைக்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர வழி வகுத்துள்ளது.கோல்கட்டா, கோரக்பூர் மண்டலத்தில், முட்டை விலை, 405 காசு வரை உயர்ந்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்திலும், விலையை உயர்த்த, ‘நிக்’ (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி) திட்டமிட்டுள்ளது.தேசிய அளவில், 24 முட்டை மண்டலங்கள் செயல்படுகின்றன. தினசரி நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, சம்பந்தப்பட்ட முட்டை மண்டல கமிட்டி மூலம், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
முட்டை உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கூடிப் பேசி, முடிவு செய்து, அதன் அடிப்படையிலேயே, முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது.தற்போது குளிர் காலம் துவங்கிஉள்ளதால், வட மாநில மக்களிடையே முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.முட்டை விலை உயர்ந்து வருவதால், அதற்கு இணையாக, தமிழகம் மற்றும் கேரளாவிலும், முட்டை விலையை உயர்த்த, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல கமிட்டி ஆர்வம் காட்டி வருகிறது.வியாபாரிகளுக்கு, பண்ணை விலையில் இருந்து குறைத்துக் கொடுக்க வேண்டாம். என, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம், பண்ணையாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகிறது.இதுகுறித்து பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:
நாமக்கல், நிக் நிர்ணயிக்கும் கொள்முதல் விலையின் படி, வியாபாரிகள், பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதில்லை.குறிப்பாக, பெரும் பண்ணையாளர்கள், தங்களின் அதிகப்படியான உற்பத்தி யால், மொத்தமாக ஆர்டர் தரும் வியாபாரிகளிடம், முட்டைகளை சப்ளை செய்து விடுகின்றனர்.அதுவும், நிக் நிர்ணயிக்கும் பண்ணை விலையைக் காட்டிலும், குறைத்து விற்கின்றனர். அதனால், சிறு பண்ணையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|