பொருளாதார மந்த நிலையால் குடியிருப்பு  விற்பனையில் தேக்கம்பொருளாதார மந்த நிலையால் குடியிருப்பு விற்பனையில் தேக்கம் ... மீண்டும் ரூ.63-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.63-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பு ...
வட மாநிலங்களின் தேவையால்முட்டை விலை மேலும் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
00:46

நாமக்கல்:வட மாநிலங்களில் குளிர் காலம் துவங்கியுள்ளதால், முட்டைக்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர வழி வகுத்துள்ளது.கோல்கட்டா, கோரக்பூர் மண்டலத்தில், முட்டை விலை, 405 காசு வரை உயர்ந்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்திலும், விலையை உயர்த்த, ‘நிக்’ (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி) திட்டமிட்டுள்ளது.தேசிய அளவில், 24 முட்டை மண்டலங்கள் செயல்படுகின்றன. தினசரி நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, சம்பந்தப்பட்ட முட்டை மண்டல கமிட்டி மூலம், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
முட்டை உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கூடிப் பேசி, முடிவு செய்து, அதன் அடிப்படையிலேயே, முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது.தற்போது குளிர் காலம் துவங்கிஉள்ளதால், வட மாநில மக்களிடையே முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.முட்டை விலை உயர்ந்து வருவதால், அதற்கு இணையாக, தமிழகம் மற்றும் கேரளாவிலும், முட்டை விலையை உயர்த்த, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல கமிட்டி ஆர்வம் காட்டி வருகிறது.வியாபாரிகளுக்கு, பண்ணை விலையில் இருந்து குறைத்துக் கொடுக்க வேண்டாம். என, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம், பண்ணையாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகிறது.இதுகுறித்து பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:
நாமக்கல், நிக் நிர்ணயிக்கும் கொள்முதல் விலையின் படி, வியாபாரிகள், பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதில்லை.குறிப்பாக, பெரும் பண்ணையாளர்கள், தங்களின் அதிகப்படியான உற்பத்தி யால், மொத்தமாக ஆர்டர் தரும் வியாபாரிகளிடம், முட்டைகளை சப்ளை செய்து விடுகின்றனர்.அதுவும், நிக் நிர்ணயிக்கும் பண்ணை விலையைக் காட்டிலும், குறைத்து விற்கின்றனர். அதனால், சிறு பண்ணையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)