பதிவு செய்த நாள்
12 நவ2013
00:23
மும்பை:நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 63.24ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.சென்ற வாரத்தில், இறுதி வர்த்தக தினமான வெள்ளி அன்று, ரூபாய் மதிப்பு, 62.48 ஆக இருந்தது.கவலை கொள்ள வேண்டாம்.இது, நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று, மேலும், 76 காசுகள் சரிவடைந்து, 63.24ல் நிலைகொண்டது. நேற்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.60ஆக இருந்தது.
இது, ஒரு கட்டத்தில், 63.44 வரை சரிவடைந்தது.கடந்த செப்டம்பர் மாதம், 18ம் தேதி, ரூபாய் மதிப்பு, 63.33 ஆக குறைந்தது.இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தின் இடையே தான், ரூபாய் மதிப்பு, இந்த அளவை விட, தாண்டியது.இதுகுறித்து, டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. விரைவில், அதன் மதிப்பு, ஒரு நிலைக்கு வரும்' என்றார்.கடந்த செப்., 4ம் தேதி, ரிசர்வ் வங்கி கவர்னராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்றது முதல்,ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க,பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்.
அவற்றில் ஒன்றாக, எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக, ரிசர்வ் வங்கியிடம் டாலர் வாங்கும் நடைமுறை, குறிப்பிடத்தக்க பலனை தந்தது.ஏற்ற, இறக்கம்:ரூபாய் மதிப்பின் தொடர் சரிவு:தடுக்கப்பட்டு, மெல்ல அதன் மதிப்பு, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி காணத் துவங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக, ரூபாய் மதிப்பு, 61 - 62க்கும் இடையே, ஏற்ற, இறக்கமாக இருந்தது.இந்நிலையில், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த டாலரில், 30 சதவீதத்தை குறைத்தது.இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், டாலர் பற்றாக்குறையை சமாளிக்க, மீண்டும் அன்னியச் செலாவணி சந்தையில் டாலரை வாங்கத் துவங்கின.
இதன் காரணமாக, டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயரத் துவங்கியுள்ளது. இது, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கும் வித்திட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும், சராசரியாக, 75லட்சம் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன. இதற்காக, இந்நிறுவனங்களுக்கு, மாதந்தோறும், 800 - 850கோடி டாலர் தேவைப்படுகிறது. நாள்தோறும், குறைந்தபட்சம், 25 கோடி டாலர் வாங்க வேண்டி உள்ளது.இதனால், சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி, நேரடியாக, குறிப்பிட்ட வங்கி மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு, டாலரை வழங்கி வருகிறது.
வங்கி டெபாசிட்இந்த அளவு, தற்போது குறைக்கப்பட்டுள்ளதால், ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், 28ம் தேதி, ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 6௮.85ஆக வீழ்ச்சி கண்டது. அதன் பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் மதிப்பு, 8 சதவீதம் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதுஇதனிடையே, வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச்செலாவணியிலான வங்கி டெபாசிட் மற்றும், வங்கிகள் திரட்டிய அன்னியச் செலாவணியிலான கடன் மூலம், 1,750 கோடி டாலர் பெறப்பட்டுஉள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|