பதிவு செய்த நாள்
12 நவ2013
00:28
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்றும், மோசமாகவே இருந்தது. அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட, வேலைவாய்ப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.இதனால், அமெரிக்கா, பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.சீனாவில், தொழில்துறை உற்பத்தி, மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 175.19 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,490.96 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 20,672.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,453.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, எல் அண்டு டி, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவுஅடைந்தும், டாக்டர் ரெட்டீஸ் லேப், டாட்டா ஸ்டீல், மாருதி உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 61.95 புள்ளிகள் சரிவுஅடைந்து, 6,078.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தி்ன் இடையே அதிகபட்சமாக, 6,141.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,067.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|