பதிவு செய்த நாள்
13 நவ2013
10:16
மும்பை : இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(நவ., 13ம் தேதி) சரிவுடன் துவங்கியது. பின்னர் சற்று நேரத்தில் சென்செக்ஸ் சிறிய ஏற்றம் கண்டது. இதனால் 10 மணியளவில் இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கத்தில் காணப்பட்டது. பின்னர் மீண்டும் சரிய தொடங்கியது.
வர்த்தகநேர துவக்கத்தில் காலை 9.15 நிலவரத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 53.97 புள்ளிகள் சரிந்து 20,227.94-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 19.90 புள்ளிகள் சரிந்து 5,998.15-ஆகவும் இருந்தது. தொடர்ந்து 10.15 மணியளவில் சென்செக்ஸ் 16.75 புள்ளிகள் சரிந்து 20,215.16-ஆகவும், நிப்டி 9.20 புள்ளிகள் சரிந்து 6,008.85-ஆகவும் இருந்தது.
முன்னதாக நேற்று வெளியான சில்லரை பணவீக்கம் இரட்டை இலக்கை(10.09-ஆக) தொட்டதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது மற்றும் ரூபாயின் மதிப்பில் காணப்படும் சரிவும் இந்திய பங்குசந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இருப்பினும் தொழில்துறை உற்பத்தியில் கடந்தமாதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பங்குசந்தைகளில் உயர்வு ஏற்படும் என தெரிகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|