பதிவு செய்த நாள்
18 நவ2013
00:17
இந்தியாவில் இருந்து இறக்குமதிஆகும் காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவில் பூச்சி மருந்து கலந்துள்ளதாக, சவுதி அரேபிய அரசு குற்றம் சாட்டி உள்ளது.இதேநிலை தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
காய்கறி ஏற்றுமதிகடந்த 2012–13ம் நிதியாண்டில், இந்தியாவின் காய்கறிகள் ஏற்றுமதி, 1,334 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011–12ம் நிதியாண்டில், 1,299 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, சென்ற நிதியாண்டில், இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி, 2.7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த காய்கறி ஏற்றுமதியில், மேற்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு, 33 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகள், அதிக அளவில், இந்திய காய்கறிகளை இறக்குமதி செய்து கொள்கின்றன.இருந்த போதிலும், சென்ற, 2012–13ம் நிதியாண்டில், அதிக அளவில், இந்திய காய்கறிகளை இறக்குமதி செய்ததில், பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அவ்வாண்டில், 284 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய காய்கறிகளை, பாகிஸ்தான் இறக்குமதி செய்து உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளது. இதில், இடம் பெற்றுள்ள நாடுகள், 255 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ளன.சவுதி அரேபியா, 92 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.இறக்குமதி அதிகரிப்புசவுதி அரேபியாவின், இந்திய காய்கறி இறக்குமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2010–11ம் நிதியாண்டில், சவுதி அரேபியா, இந்தியாவில் இருந்து, 66 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை, இறக்குமதி செய்திருந்தது. இது, சென்ற 2013–14ம் நிதியாண்டில், 85 கோடி ரூபாயாக அதிகரித்தது. சென்ற நிதியாண்டில், கூடுதலாக, 7 கோடி ரூபாய்க்கு இந்திய காய்கறிகளை, இந்நாடு இறக்குமதி செய்து உள்ளது.
இந்நிலையில், இத்தகைய வளர்ச்சிக்கு வேட்டு வைக்கும் விதமாக, நடப்பு நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, இரண்டு சரக்கு பெட்டகங்களில் அனுப்பி வைக்கப்பட்ட, பச்சை மிளகாயில், நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிக அளவில் பூச்சி மருந்து உள்ளதாக, சவுதி அரேபிய அரசு குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து, இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்திற்கும் (அபிடா), சவுதி அரேபிய அரசு கடிதம் எழுதி உள்ளது.அக்கடிதத்தில், அண்மையில், இந்தியா வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகளில், அனுமதிக்கப்பட்டதை விட, கூடுதலாக, பூச்சி மருந்து படிமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் காலத்தில், சவுதி அரேபிய அரசு, கடும் நடவடிக்கை எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை:இதையடுத்து, அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும், ‘அபிடா’ அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சவுதி அரேபியாவின் இறக்குமதி விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து காய்கறிகளும், ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பாக, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.சவுதி அரேபியா, பூச்சி மருந்து படிம அளவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இருந்த போதிலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் பின்பற்றும், விதிமுறைகளின் படி, இனி, இந்திய ஏற்றுமதியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு காய்கறிகளை அனுப்ப வேண்டும்.மேலும், சவுதி அரேபியாவிற்கு, புத்தம் புதிய காய்கறிகளை அனுப்பும் போது, ‘கோடெக்ஸ்’ மற்றும் இதர சர்வதேச விதிமுறைகளையும், இந்திய ஏற்றுமதியாளர்கள் பின்பற்றுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் முதலிடம்:சென்ற நிதியாண்டில், இந்தியாவின் காய்கறி ஏற்றுமதியில், பாகிஸ்தான் (284 கோடி ரூபாய்) முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், ஐக்கிய அரபு நாடுகள் (255 கோடி ரூபாய்), இங்கிலாந்து (151 கோடி ரூபாய்), நேபாளம் (143 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|