பதிவு செய்த நாள்
18 நவ2013
00:36
ஈரோடு: எளிமைப்படுத்தப்பட்ட முறையை பயன்படுத்தி, சேவை வரியை செலுத்த, கலால் மற்றும் சுங்க வரித்துறை அழைப்பு விடுத்து உள்ளது.பொது மன்னிப்பு திட்டம்சேவை வரியின் கீழ் பதிவு செய்து, அச்சட்டத்தை சரிவர கடைபிடிக்காமல் இருப்பவர்கள், சேவை வரி செலுத்த வேண்டியவர்களாக இருந்தும், அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதவர்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு பொது மன்னிப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது.
இதற்கு ‘சேவை வரி தன்னார்வ இணக்க ஊக்குவிப்பு திட்டம் 2013’ என, பெயரிடப்பட்டுள்ளது. சென்ற மே, 10ம் தேதி இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.2007ம் ஆண்டு, அக்டோபர் முதல், 2012 டிசம்பர் வரை சேவை வரி செலுத்தாதவர்கள், இத்திட்டத்தின் கீழ், ‘வி.சி.இ.எஸ்1’ என்ற படிவத்தை பூர்த்தி செய்து, கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.இதில், 50 சதவீத தொகையை, இந்தாண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டும். அத்தொகை, இந்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்ன தாக செலுத்தி இருக்க கூடாது.
மீதமுள்ள, 50 சதவீத வரியை, 2014ம் ஆண்டு ஜூன் வரை வட்டியின்றி செலுத்தலாம்.கால அவகாசத்துக்குள் வரி செலுத்தாவிட்டால், அடுத்தாண்டு இறுதிக்குள், 18 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். வட்டி தொகை, 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கணக்கிடப்படும்.பணம் செலுத்திய படிவத்தை, உடனடியாக அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். படிவம் தாக்கல் செய்த, ஏழு நாட்களுக்குள் வரி அலுவலரிடம் இருந்து, ‘வி.சி.இ.எஸ்2’ என்ற படிவத்தில் ஒப்புகை பெற வேண்டும்.முழுமையாக வரி செலுத்திய பின், வரி அலுவலருக்கு, ஏழு நாட்களுக்குள் தெரிவித்து, ‘விசி.இ.எஸ்3’ என்ற படிவத்தில் ஒப்புகை பெற வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், சேவை வரி செலுத்துபவர்களுக்கு அபராதம், வட்டி, சிறை தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வரித்தொகையை பணமாக மட்டும் செலுத்த வேண்டும். இந்தாண்டு ஜனவரி மற்றும் அதன் பின் செலுத்த வேண்டிய வரி தொகையை, வட்டியுடன் செலுத்த வேண்டும்.‘வி.சி.இ.எஸ்1’ படிவம் சமர்பிக்கும் போது செலுத்த வேண்டியவரின் கணக்குகளை, ஆறு மாதத்துக்கு ஒரு முறை சமர்பிக்கும் ‘எஸ்.டி.3’ என்ற படிவத்தில் உள்ள அட்டவணைப்படி சமர்பிக்க வேண்டும்.சேவை வரி படிவத்தை நேர்மையாக தாக்கல் செய்து, ஆனால் வரியை செலுத்த தவறியவர்கள், சேவை வரி சட்டப்படி, 2013ம் ஆண்டு மார்ச்சுக்கு முன் சோதனைக்கு உள்ளானவர்கள், சேவை வரி சட்டப்பிரிவு, 72, 73ன்படி மார்ச் மாதத்துக்கு முன் விளக்க அறிக்கை கேட்டு, நோட்டீஸ் பெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. சுங்க அலுவலகம்:மேலும், தணிக்கை கடிதம் பெற்றவர்களுக்கும், சுங்க அலுவலகத்தில் இருந்து கணக்குகளை சமர்பிக்கும்படி கோரப்பட்ட கடிதம் பெற்றவர்களுக்கும், இத்திட்டம் பொருந்தாது, என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|