பதிவு செய்த நாள்
23 நவ2013
00:33
பெங்களூரு:டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம், நடப்பாண்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நேர்காணல்:இது குறித்து, இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் நிர்வாக துணை தலைவர் அஜோய் முகர்ஜி கூறியதாவது:நடப்பாண்டில், நிறுவனம், வளாக நேர்காணல் மூலம், 25 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவர்.450 கல்வி நிறுவனங்களில், அங்கீகரிக்கப்பட்ட, முதன்மையான 300 கல்வி நிறுவனங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இது, வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும்.போலி பணி நியமன உத்தரவு கடிதங்களை தவிர்க்கும் வகையில், பணியாளர் தேர்வு நடைமுறை முழுவதும், ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது.சீனாவுடன் ஒப்பிடும் போது, நம்நாட்டில் முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, நிறுவனம், ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும், 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும்.பெண்கள்:தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, 2.85 லட்சமாக உள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|