பதிவு செய்த நாள்
26 நவ2013
01:16
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், முட்டை விலை உயர்ந்திருப்பதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாமக்கல்லில் நடைபெற்ற, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையை, ஐந்து காசுகள் அதிகரித்து, 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நுகர்வு அதிகரித்து வருவதால், முட்டை விலை, ஒரே நாளில், ஐந்து காசு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில், முட்டை விலை உயர்ந்திருப்பது, நுகர்வோருக்கு கவலை அளித்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 392, பெங்களூரு, 390, மைசூர், 388, ஐதராபாத், 389, மும்பை, 425, விஜயவாடா, 389, கோல்கட்டா, 450, பர்வாலா, 406, டில்லி, 430.இவ்வாறு, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 55 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 58 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|