பதிவு செய்த நாள்
29 நவ2013
00:47
‘மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 114.65 புள்ளிகள் அதிகரித்து, 20,534.91 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 20,606.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,461.51 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., ஹிண்டால்கோ, மகிந்திரா உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, டாட்டா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 34.75 புள்ளிகள் உயர்ந்து, 6,091.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,112.95 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக, 6,068.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|