நோக்கியாவின் 6,500 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமருக்கு மனுநோக்கியாவின் 6,500 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமருக்கு மனு ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44 ...
தங்க நகைகள் இறக்குமதியில் ரூ.225 கோடி வரி ஏய்ப்பு: 300 நிறுவனங்கள் சிக்கின; தாய்லாந்து அதிகாரிகள் உடந்தை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2013
01:01

தாய்லாந்தில் இருந்து, தங்க நகைகளை இறக்குமதி செய்ததில், 225 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த, 300 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இந்தியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.இதன்படி, இரு நாடுகளும் மேற்கொள்ளும் பரஸ்பர இறக்குமதியில், குறிப்பிட்ட பொருள்களுக்கு சுங்க வரி விலக்கு மற்றும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
குறைந்த விலை:இந்த வகையில், தாய்லாந்தில் தயாரிக்கப்படும், 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட தங்க நகைகளுக்கு, இந்தியாவில், 1 சதவீதம் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.இது, இதர நாடுகளின் தங்க நகைகள் இறக்குமதிக்கு, 10 சதவீதமாக இருந்தது.இதனால், இந்திய வர்த்தகர்கள், பிற நாடுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும் தங்க நகைகளை வாங்கி, அவற்றை தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டதாக கூறி, 1 சதவீத சுங்க வரி செலுத்தி, இறக்குமதி செய்துள்ளனர்.
இந்த முறைகேடு, அரசின் கவனத்திற்குவந்ததை அடுத்து, இந்தாண்டு துவக்கத்தில், தாய்லாந்து தங்க நகைகள் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட சுங்க வரி சலுகை ரத்து செய்யப்பட்டது.அதே சமயம், நாட்டின் முன்னணி தங்க நகை இறக்குமதி நிறுவனங்களில், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கடந்த, 2012–13ம் நிதியாண்டில், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை இறக்குமதி செய்த வகையில், 300 நிறுவனங்கள், 225 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு:இதையடுத்து,அந்த நிறுவனங்களுக்கு மத்தியஅரசுநோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதில், 25 நிறுவனங்கள், அரசு நிர்ணயித்த வரியை செலுத்தி உள்ளன. சில நிறுவனங்கள், அரசின் நடவடிக்கையை எதிர்த்து, வழக்கு தொடுத்துள்ளன. அவற்றிலும், அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பாகி வருவதாக, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு சில நிறுவனங்கள், 'தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட, 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட தங்க நகைகள்' என, அந்நாட்டு அரசு அதிகாரிகளிடம் முறைகேடாக சான்றிதழ் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளன.ஒப்புதல்:இப்பிரச்னையை, மத்திய அரசு, தாய்லாந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இதையடுத்து, தாய்லாந்து அரசு, உள்நாட்டு தங்க நகை தயாரிப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது.சென்ற அக்டோபரில், இந்தியா வந்த தாய்லாந்து துணை பிரதமர் நிவட்டும்ராங் பூங்சாங்பைசன், தங்க நகைகளுக்கான இறக்குமதி வரி (இரு மாதங்களுக்கு முன், 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது) நிர்ணயத்திற்கு, தமது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.தாய்லாந்தில் இருந்து தங்க நகைகளை, 15 சதவீத சுங்க வரி செலுத்தி, இறக்குமதி செய்வது, இந்திய வர்த்தகர்களுக்கு லாபகரமாக இருக்காது.
ஏனெனில், இறக்குமதி விலைக்கும், உள்நாட்டு விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.அதே சமயம், தாய்லாந்தில் இருந்து, 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களை இறக்குமதி செய்தாலும், அது, இதர நாடுகளின் விலையை ஒட்டியே இருக்கும்.லாபம் இல்லை:அதனால், தாய்லாந்தில் இருந்து, தங்க நகைகளின் இறக்குமதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், இனி இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2008–09ம் நிதிஆண்டில், தாய்லாந்தில் இருந்து, 2 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் மற்றும் தங்க நகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இது, சென்ற, 2012–13ம் நிதியாண்டில், 17.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)