பதிவு செய்த நாள்
29 நவ2013
01:01
தாய்லாந்தில் இருந்து, தங்க நகைகளை இறக்குமதி செய்ததில், 225 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த, 300 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இந்தியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.இதன்படி, இரு நாடுகளும் மேற்கொள்ளும் பரஸ்பர இறக்குமதியில், குறிப்பிட்ட பொருள்களுக்கு சுங்க வரி விலக்கு மற்றும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
குறைந்த விலை:இந்த வகையில், தாய்லாந்தில் தயாரிக்கப்படும், 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட தங்க நகைகளுக்கு, இந்தியாவில், 1 சதவீதம் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.இது, இதர நாடுகளின் தங்க நகைகள் இறக்குமதிக்கு, 10 சதவீதமாக இருந்தது.இதனால், இந்திய வர்த்தகர்கள், பிற நாடுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும் தங்க நகைகளை வாங்கி, அவற்றை தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டதாக கூறி, 1 சதவீத சுங்க வரி செலுத்தி, இறக்குமதி செய்துள்ளனர்.
இந்த முறைகேடு, அரசின் கவனத்திற்குவந்ததை அடுத்து, இந்தாண்டு துவக்கத்தில், தாய்லாந்து தங்க நகைகள் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட சுங்க வரி சலுகை ரத்து செய்யப்பட்டது.அதே சமயம், நாட்டின் முன்னணி தங்க நகை இறக்குமதி நிறுவனங்களில், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கடந்த, 2012–13ம் நிதியாண்டில், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை இறக்குமதி செய்த வகையில், 300 நிறுவனங்கள், 225 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு:இதையடுத்து,அந்த நிறுவனங்களுக்கு மத்தியஅரசுநோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதில், 25 நிறுவனங்கள், அரசு நிர்ணயித்த வரியை செலுத்தி உள்ளன. சில நிறுவனங்கள், அரசின் நடவடிக்கையை எதிர்த்து, வழக்கு தொடுத்துள்ளன. அவற்றிலும், அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பாகி வருவதாக, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு சில நிறுவனங்கள், 'தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட, 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட தங்க நகைகள்' என, அந்நாட்டு அரசு அதிகாரிகளிடம் முறைகேடாக சான்றிதழ் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளன.ஒப்புதல்:இப்பிரச்னையை, மத்திய அரசு, தாய்லாந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இதையடுத்து, தாய்லாந்து அரசு, உள்நாட்டு தங்க நகை தயாரிப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது.சென்ற அக்டோபரில், இந்தியா வந்த தாய்லாந்து துணை பிரதமர் நிவட்டும்ராங் பூங்சாங்பைசன், தங்க நகைகளுக்கான இறக்குமதி வரி (இரு மாதங்களுக்கு முன், 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது) நிர்ணயத்திற்கு, தமது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.தாய்லாந்தில் இருந்து தங்க நகைகளை, 15 சதவீத சுங்க வரி செலுத்தி, இறக்குமதி செய்வது, இந்திய வர்த்தகர்களுக்கு லாபகரமாக இருக்காது.
ஏனெனில், இறக்குமதி விலைக்கும், உள்நாட்டு விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.அதே சமயம், தாய்லாந்தில் இருந்து, 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களை இறக்குமதி செய்தாலும், அது, இதர நாடுகளின் விலையை ஒட்டியே இருக்கும்.லாபம் இல்லை:அதனால், தாய்லாந்தில் இருந்து, தங்க நகைகளின் இறக்குமதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், இனி இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2008–09ம் நிதிஆண்டில், தாய்லாந்தில் இருந்து, 2 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் மற்றும் தங்க நகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இது, சென்ற, 2012–13ம் நிதியாண்டில், 17.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|