தங்கம் விலை ரூ.96 குறைந்ததுதங்கம் விலை ரூ.96 குறைந்தது ... இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்! இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்! ...
திருப்பதியில் குவியும் சில்லரை நாணயங்கள் நேரடியாக சேகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
14:55

திருப்பதி:திருமலையில், நாணயங்களை நேரடியாக சேகரிக்க, ரிசர்வ் வங்கி, ஒப்புதல் அளித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்தும், ரூபாய் நோட்டு, நாணயம், தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள், ஆகியவற்றை, தேவஸ்தானம் தனித்தனியே பிரித்து, வங்கிகளில் சேமிக்கிறது. ரூபாய் நோட்டுகளை, கோவிலுக்குள் உள்ள, "பரக்காமணி' பகுதியில் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது.

நாணயங்களை பிரித்து, மூட்டைகளாக கட்டி, திருப்பதி தலைமை அலுவலகத்தில் கணக்கிட்டு, மாதமொரு முறை, சுழற்சி முறையில், ஒருபொதுத்துறை தேசிய வங்கிக்கு வழங்குகிறது. தினமும், ஒன்பது லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் வரை, சில்லரை நாணயங்கள் கிடைக்கின்றன. சில இடைத்தரகர்கள், தேவஸ்தான ஊழியர்களுடன் இணைந்து, 100 ரூபாய் சில்லரைக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை, கமிஷன் பெற்று, கள்ள சந்தைக்கு அளிக்கின்றனர். ஒத்துழைக்க மறுத்தால், தேவஸ்தான அதிகாரிகளிடம், புகார் தெரிவிப்பதாக மிரட்டுகின்றனர்.

இதை தவிர்க்க, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து, "திருப்பதி உண்டியல் மூலம் கிடைக்கும் நாணயங்களை, நேரடியாக சேகரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.அதற்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதியில் வெகு விரைவில், ரிசர்வ் வங்கி, தனி கவுன்ட்டர் அமைக்க உள்ளது. திருப்பதியில் கிடைக்கும் நாணயங்களை, போக்குவரத்து துறை உட்பட, பல்வேறு அரசு துறைகளுக்கு வழங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)