பதிவு செய்த நாள்
03 டிச2013
00:45
வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளையின் விலை, 107 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,880 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், தலா, 14.2 கிலோ அடங்கிய, வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை மற்றும், தலா, 19 கிலோ அடங்கிய வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை என, இரண்டு வகை, உருளைகளை விற்பனை செய்கின்றன.சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, மாதத்தின் முதல் தேதி, வர்த்தக பயன்பாடு மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் விலைகள், மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், சென்னையில், வர்த்தக பயன்பாட்டிற்கான, உருளையின் விலை, 1,773 ரூபாய் என்ற அளவில் இருந்தது. தற்போது, இதன் விலை, 107 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,880 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக, மானியம் அல்லாத எரிவாயு உருளையின் விலை, 63 ரூபாய் அதிகரித்து, 1,010.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய, உருளையின் விலை, 398 ரூபாய் என்ற அளவில் உள்ளது.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|