ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ... முக்கிய துறைகளின் உற்பத்தியில் கடும் சரிவு நிலை முக்கிய துறைகளின் உற்பத்தியில் கடும் சரிவு நிலை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
7 மாதங்களில் 20 லட்சம் முதலீட்டாளர்களை இழந்தது பரஸ்பர நிதி துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
00:44

புதுடில்லி: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நடப்பாண்டு, ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 20 லட்சம் முதலீட்டாளர்களை இழந்துள்ளன. பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் ஒன்றிணைப்பு, பங்கு வர்த்தகத்தில் சாதக மான போக்கு,போன்றவற்றால்,மேற்கண்ட எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள், கணக்குகளை முடித்துக் கொண்டுள்ளனர்.
கணக்கு எண்ணிக்கை:சென்ற, 2012–13ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்களிடம், 4.28 கோடி அளவிற்கு, முதலீட்டாளர்கள் கணக்கு வைத்திருந்தனர்.இதன்படி கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டின், இதே ஏழு மாதங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 20.72 லட்சம் குறைந்து, 4.07 கோடியாக சரிவடைந்துள்ளது.
இதேகாலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 25 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்து, 3.32 கோடியில் இருந்து, 3.06 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், கடன் பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 4.22 லட்சம் அதிகரித்து, 66 லட்சமாக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், எக்ஸ்சேஞ் டிரேடட் பண்டு திட்டங்கள், 48,755 கணக்குகளை இழந்து, 7 லட்சம் என்ற அளவில் உள்ளது.பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய, 'பேலன்ஸ்டு பண்டு' களில்,1.06 லட்சம் கணக்குகள் உயர்ந்து, 27 லட்சமாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற அக்டோபர் 31ம் வரையிலான நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், 1,335 திட்டங்களை வெளியிட்டுள்ளன. இவற்றில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை, 344 ஆகவும், கடன்பத்திர முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை, 891ஆகவும் உள்ளன.
முதலீட்டாளர்கள்சென்ற, 2012–13ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி துறை, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் கணக்குகளை இழந்துள்ளது. இந்த வகையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக, அதிக அளவில் முதலீட்டாளர்களின் கணக்குகளை இழந்து வருகின்றன.இதற்கு முந்தைய மூன்று நிதியாண்டுகளிலும், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கிட்டத்தட்ட, 15லட்சம் முதலீட்டாளர்களை இழந்துஉள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)