பதிவு செய்த நாள்
04 டிச2013
00:44
புதுடில்லி: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நடப்பாண்டு, ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 20 லட்சம் முதலீட்டாளர்களை இழந்துள்ளன. பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் ஒன்றிணைப்பு, பங்கு வர்த்தகத்தில் சாதக மான போக்கு,போன்றவற்றால்,மேற்கண்ட எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள், கணக்குகளை முடித்துக் கொண்டுள்ளனர்.
கணக்கு எண்ணிக்கை:சென்ற, 2012–13ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்களிடம், 4.28 கோடி அளவிற்கு, முதலீட்டாளர்கள் கணக்கு வைத்திருந்தனர்.இதன்படி கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டின், இதே ஏழு மாதங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 20.72 லட்சம் குறைந்து, 4.07 கோடியாக சரிவடைந்துள்ளது.
இதேகாலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 25 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்து, 3.32 கோடியில் இருந்து, 3.06 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், கடன் பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, 4.22 லட்சம் அதிகரித்து, 66 லட்சமாக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், எக்ஸ்சேஞ் டிரேடட் பண்டு திட்டங்கள், 48,755 கணக்குகளை இழந்து, 7 லட்சம் என்ற அளவில் உள்ளது.பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய, 'பேலன்ஸ்டு பண்டு' களில்,1.06 லட்சம் கணக்குகள் உயர்ந்து, 27 லட்சமாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற அக்டோபர் 31ம் வரையிலான நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், 1,335 திட்டங்களை வெளியிட்டுள்ளன. இவற்றில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை, 344 ஆகவும், கடன்பத்திர முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை, 891ஆகவும் உள்ளன.
முதலீட்டாளர்கள்சென்ற, 2012–13ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி துறை, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் கணக்குகளை இழந்துள்ளது. இந்த வகையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக, அதிக அளவில் முதலீட்டாளர்களின் கணக்குகளை இழந்து வருகின்றன.இதற்கு முந்தைய மூன்று நிதியாண்டுகளிலும், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கிட்டத்தட்ட, 15லட்சம் முதலீட்டாளர்களை இழந்துஉள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|