பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்புபாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.75 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.75 ...
வர்த்தகம் » ஜவுளி
தமிழகத்தில் ரூ.5 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
02:43

பள்ளிபாளையம்: தொடர் மின் வெட்டு காரணமாக, தமிழகம் முழுவதும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான, ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி பாதிப்பை தடுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், எட்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இங்கு, தினமும், 50 லட்சம் மீட்டர் அளவிற்கு, பல்வேறு துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பின், இவை வெளியூர், வெளி மாநிலங்களுக்கு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, தமிழகம் முழுவதும் மின் வெட்டு உள்ள தால், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் உற்பத்தி, 40 சதவீதம் குறைந்துள்ளது. நுாலிழை விலையும், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால், விசைத்தறிதொழிலாளர்கள், வேலை இழந்துள்ளதுடன், கூலியும், குறைவாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜெனரேட்டரை பயன்படுத்தி, விசைத்தறியை இயக்கினாலும், உற்பத்தி செலவுக்கே, சரியாக உள்ளது.மின் வெட்டு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, நுாலிழை விலை உயர்வு போன்ற காரணங்களால், உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி உள்ளனர். இக்காரணங்களால், மாநிலம் முழுவதும், நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுஉள்ளது.
இதே நிலை நீடித்தால், நெசவுத்தொழில் மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது. விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக தென்னிந்திய துணைத் தலைவர் கருணாநிதி கூறியதாவது:மின் வெட்டு, நூலிழை விலை ஏற்றம், உற்பத்தி செய்த துணிகள் விற்பனையின்றி தேக்கம் ஆகியவற்றால், விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)