பதிவு செய்த நாள்
05 டிச2013
17:18
மும்பை : கடந்த இருதினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காம் நாளில் அதிக ஏற்றத்துடன் துவங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேலும், நிப்டி 120 புள்ளிகளும் உயர்ந்து இருந்தன. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு அதிக வெற்றிகள் கிடைக்கும் என்ற கருத்து கணிப்பு வெளியானதால் இன்றைய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதிக ஏற்றத்துடன் இருந்த பங்குசந்தைகள், பின்னர் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று சரிந்தது. இருப்பினும் ஏற்றத்துடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 249.10 புள்ளிகள் உயர்ந்து 20,957.81-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 80.15 புள்ளிகள் உயர்ந்து 6,241.10-ஆகவும் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 450 புள்ளிகள் உயர்ந்து 21,165 வரையும், நிப்டி 6,300 புள்ளிகள் வரையும் சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 20 பங்குகளுக்கு மேல் ஏற்றத்துடன் இருந்தது. குறிப்பாக ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., எல் அண்ட் டி., நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|