பதிவு செய்த நாள்
09 டிச2013
14:45
திண்டுக்கல்: பால் தரத்தை மேம்படுத்த, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தூய பால் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பால் தரமுள்ளதாக உள்ளது. அதேப்போல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலின் தரத்தையும் மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்காக ரூ.28.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பது, சுகாதாரத்துடன் கால்நடைகளை வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். பால் கறப்பதற்கு தேவைப்படும் சில்வர் பாத்திரங்கள் இலவசமாக அளிக்கப்படும். மேலும், பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் குளிரூட்டும் நிலையங்களில் உள்ள பரிசோதனை கூடங்கள் நவீனப்படுத்தப்படும். புதிய பால் குளிர்விப்பான்கள் நிறுவ 100% மானியம் அளிக்கப்படும். இதன் மூலம் பாலின் தரத்தை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|