ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களில்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலிடம் அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களில்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ... ...
வேலைவாய்ப்பு அளிப்பதில்இந்தியா 2வது இடத்தை பிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
00:10

புதுடில்லி: வரும் 2014ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், இந்தியா, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் என, மேன்பவர்குரூப் இந்தியா நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குனர் ஏ.ஜி.ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:வரும், 2014ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக, கட்டுமானம், சுரங்கம் மற்றும் சேவை ஆகிய துறைகளில் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில், தைவானை அடுத்து, அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்குவதில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும். அடுத்த இடங்களை, நியூசிலாந்து, கொலம்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடிக்கும்.அதேசமயம், இத்தாலி, அயர்லாந்து, பின்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேக்கியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு மந்தமாகவே இருக்கும். இவ்வாறு ராவ் கூறினார்.
இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்தை காட்டிலும், 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, நாக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, தகவல் தொழில் நுட்பம்–மென்பொருள் துறையில், வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கி மற்றும் எண்ணெய் – எரிவாயு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை முறையே, 4 மற்றும் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், பீ.பி.ஓ மற்றும் மோட்டார் வாகன துறையில், வேலைவாய்ப்பு முறையே, 17 சதவீதம் மற்றும் 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.பெங்களூரு மற்றும் சென்னையில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை முறையே, 7 மற்றும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், டில்லி–என்.சி.ஆர் மற்றும் மும்பை நகரங்களில் இந்த எண்ணிக்கை, 2 சதவீதம் சரிவடைந்துள்ளது என, நாக்ரி டாட் காம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)