பதிவு செய்த நாள்
11 டிச2013
00:13
புதுடில்லி: அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.சர்வதேச வர்த்தக இதழான 'பார்ச்சூன்'-ன் இந்திய பதிப்பு, இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ்:இதில், 4,75,867 கோடி ரூபாய், ஆண்டு வருவாய் ஈட்டிய, பொது துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த மூன்று இடங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (4,09,883 கோடி ரூபாய்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (2,44,822 கோடி ரூபாய்), இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (2,17,771 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஐந்தாவது இடத்தையும், டாட்டா மோட்டார்ஸ், ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஓ.என்.ஜி.சி., ஏழாவது இடத்திலும், டாட்டா ஸ்டீல், எட்டாவது இடத்திலும், எஸ்ஸார் ஆயில், ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், 10வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், பார்தி ஏர்டெல் (12வது இடம்), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (14), என்.டி.பி.சி.,(15), டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (18), இன்போசிஸ் (27வது இடம்) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.முன்னணியில் உள்ள, 10 நிறுவனங்களில்,6 பொதுத்துறை நிறுவனங்களும், 4 தனியார் துறை நிறுவனங்களும் உள்ளன.முதல் 8 நிறுவனங்கள், இதற்கு முந்தைய ஆண்டு பட்டியலிலும், இதே இடத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறி:இந்திய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி மந்தமாக உள்ள போதிலும், அவற்றின் லாபம் உயர்வதற்கான அறிகுறி காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வட்டிச் செலவினம், இடர்பாட்டிற்கு உரியதாக உள்ளது.இந்த புள்ளிவிவரம், இந்திய நிறுவனங்கள், முதிர்ச்சி அடைந்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
ஊதியங்கள் உயர்ந்து விட்ட நிலையில், கடுமையான சோதனை காலத்திலும், திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதில், இந்திய நிறுவனங்கள் உறுதிப்பாடுடன் உள்ளதாக, பார்ச்சூன் இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|