வேலைவாய்ப்பு அளிப்பதில்இந்தியா 2வது இடத்தை பிடிக்கும்வேலைவாய்ப்பு அளிப்பதில்இந்தியா 2வது இடத்தை பிடிக்கும் ... வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில்30 கணக்குகளில் 36 சதவீத தொகை நிலுவை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில்30 கணக்குகளில் 36 சதவீத தொகை நிலுவை ...
அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களில்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
00:13

புதுடில்லி: அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.சர்வதேச வர்த்தக இதழான 'பார்ச்சூன்'-ன் இந்திய பதிப்பு, இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ்:இதில், 4,75,867 கோடி ரூபாய், ஆண்டு வருவாய் ஈட்டிய, பொது துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த மூன்று இடங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (4,09,883 கோடி ரூபாய்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (2,44,822 கோடி ரூபாய்), இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (2,17,771 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஐந்தாவது இடத்தையும், டாட்டா மோட்டார்ஸ், ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஓ.என்.ஜி.சி., ஏழாவது இடத்திலும், டாட்டா ஸ்டீல், எட்டாவது இடத்திலும், எஸ்ஸார் ஆயில், ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், 10வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், பார்தி ஏர்டெல் (12வது இடம்), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (14), என்.டி.பி.சி.,(15), டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (18), இன்போசிஸ் (27வது இடம்) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.முன்னணியில் உள்ள, 10 நிறுவனங்களில்,6 பொதுத்துறை நிறுவனங்களும், 4 தனியார் துறை நிறுவனங்களும் உள்ளன.முதல் 8 நிறுவனங்கள், இதற்கு முந்தைய ஆண்டு பட்டியலிலும், இதே இடத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறி:இந்திய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி மந்தமாக உள்ள போதிலும், அவற்றின் லாபம் உயர்வதற்கான அறிகுறி காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வட்டிச் செலவினம், இடர்பாட்டிற்கு உரியதாக உள்ளது.இந்த புள்ளிவிவரம், இந்திய நிறுவனங்கள், முதிர்ச்சி அடைந்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
ஊதியங்கள் உயர்ந்து விட்ட நிலையில், கடுமையான சோதனை காலத்திலும், திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதில், இந்திய நிறுவனங்கள் உறுதிப்பாடுடன் உள்ளதாக, பார்ச்சூன் இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)