பதிவு செய்த நாள்
12 டிச2013
00:12
புதுடில்லி: சர்க்கரை ஆலைகளுக்கு, 7,200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்குவது குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இறுதி முடிவெடுக்கும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.
இது குறித்த அரசாணை வெளியாகும்பட்சத்தில், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளின், 3,400 கோடி ரூபாய் நிலுவையை, வழங்கத் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் சர்க்கரை விலை சரிவடைந்துள்ளதால், இத்துறை நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. அதுமட்டுமின்றி, சர்க்கரை தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதனால், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 3,400 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. மேலும், நடப்பு பருவத்திற்கு, கரும்பிற்கு கூடுதல் விலை தரமுடியாத நிலையில் உள்ளதாக, வேளாண் அமைச்சர் சரத்பவார் தலைமையிலான குழு தெரிவித்திருந்தது.இதை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க உதவும் வகையில், 7,200 கோடி ரூபாய் அளவிற்கு, வட்டியில்லா வங்கி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, தாமஸ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|