பதிவு செய்த நாள்
12 டிச2013
00:31
ஐதராபாத்: வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல், இயற்கை எரிவாயு விலை, இரண்டு மடங்கு உயர்த்தப்பட உள்ளதால், உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு யூனிட் (ஒரு லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் – எம்.எம்.பீ.டி.யு.,) இயற்கை எரிவாயுவின் விலை, 4.20 டாலர் என்ற அளவில் உள்ளது.இது, வரும் 2014ம் ஆண்டு, ஏப்ரல் முதல், 8.42 டாலராகவும், 2015ம் ஆண்டில், 10 டாலராகவும் அதிகரிக்கப்பட உள்ளது.ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையில், 1 டாலர் உயர்ந்தால் கூட, உர நிறுவனங்களுக்கு, ஒரு டன் யூரியா தயாரிக்க, கூடுதலாக 1,384 ரூபாய் செலவாகும் என, யஷ்வந்த் சின்கா தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டு மொத்த உர உற்பத்தி, 180 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.பத்து லட்சம் டன் யூரியா தயாரிப்பதற்கு, இந்திய உர நிறுவனங்களுக்கு, சராசரியாக, 24.893 எம்.எம்.பீ.டி.யு., இயற்கை எரிவாயு தேவைப்படும். இந்நிலையில், ஒரு எம்.எம்.பீ.டி.யு., இயற்கை எரிவாயுவின் விலை, 1 டாலர் உயர்த்தப்படும் போது, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 2,466 கோடி ரூபாய் செலாவகும் என, நிலைக்குழு, பார்லிமென்டில் சமர்ப்பித்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|