வங்கிகளின் வசூலாகாத கடன்ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்வுவங்கிகளின் வசூலாகாத கடன்ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்வு ... அரிசி ஆலை தொழி­லாளர் வேலை நிறுத்தம் ஆத்­துாரில் ரூ.35 கோடி வர்த்­தகம் பாதிப்பு அரிசி ஆலை தொழி­லாளர் வேலை நிறுத்தம் ஆத்­துாரில் ரூ.35 கோடி வர்த்­தகம் ... ...
கோதுமை, பருப்பு வகைகள் உற்­பத்தி அதி­க­ரிக்கும் : பயி­ரிடும் பரப்பு உயர்ந்துள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2013
04:32

புது­டில்லி: கோதுமை, பருப்பு வகைகள், மக்காச் சோளம், எண்ணெய் வித்துக் கள் உள்­ளிட்­ட­வற்றின் பயி­ரிடும் பரப்­ப­ளவு சிறப்­பான அளவில் அதிக­ரித்­துள்­ள­தை­ய­டுத்து, நடப்­பாண்டில் நாட்டின் உணவு தானி­யங்கள் உற்­பத்தி சாதனை அளவை எட்டும் என, மத்­திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரி­வித்­துள்ளார்.மத்­திய பிர­தேசம்இதற்கு சான்­றாக, கடந்­தாண்டை காட்­டிலும், நடப்­பாண்டில் இது­வரை­யி­லு­மாக, மத்­திய பிர­தேசம், உத்­த­ர­பி­ர­தேசம் ஆகிய மாநி­லங்­களில், கோதுமை பயி­ரிடும் பரப்­ப­ளவு முறையே, 14.53 லட்சம் ஹெக்டேர் மற்றும் 12.65 லட்சம் ஹெக்டேர் அதி­க­ரித்­துள்­ளது.
மேலும், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநி­லங்­க­ளிலும், கோதுமை பயி­ரிடும் பரப்­ப­ளவு முறையே, 4.95 லட்சம் ஹெக்டேர் மற்றும் 3.94 லட்சம் ஹெக்டேர் உயர்ந்­துள்­ளது.இதை­ய­டுத்து, உள்­நாட்டில், இது­வ­ரை­யி­லு­மாக, கோதுமை பயி­ரிடும் பரப்­ப­ளவு ஒட்டு மொத்த அளவில், 253.75 லட்சம் ஹெக்­டே­ராக அதி­க­ரித்­துள்­ளது.இது, கடந்­தாண்டு இதே காலத்தில், 227.52 லட்சம் ஹெக்­டே­ராக குறைந்து காணப்­பட்­டது.இதே போன்று, பருப்பு வகைகள் பயி­ரிடும் பரப்­ப­ளவும், 119.73 லட்சம் ஹெக்­டே­ரி­லி­ருந்து, 123.60 லட்சம் ஹெக்­டே­ராக வளர்ச்சி கண்­டுள்­ளது.மேலும், மக்காச் சோளம் பயிரிடும் பரப்பும், 8.75 லட்சம் ஹெக்­டே­ரி­லி­ருந்து, 9.18 லட்சம் ஹெக்­டே­ராக அதி­க­ரித்­துள்­ளது.ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநி­லத்தில், கடுகு பயி­ரிடும் பரப்பு, 2.41 லட்சம் ஹெக்டேர் அதி­க­ரித்து, 29.73 லட்சம் ஹெக்­டே­ராக உயர்ந்­து உள்ளது. இதை­ய­டுத்து, ஒட்டு மொத்த எண்ணெய் வித்­துக்கள் சாகு­படி பரப்பு, 75.85 லட்சம் ஹெக்­டே­ரி­ல்­ இருந்து, 77.78 லட்சம் ஹெக்­டே­ராக சிறப்­பான அளவில் உயர்ந்­துள்­ளது.இருப்­பினும், நிலக்­க­டலை பயிரிடும் பரப்­ப­ளவு, கடந்­தாண்டை விட, நடப்­பாண்டில், 3.21 லட்சம் ஹெக்­டே­ராக குறைந்­துள்­ளது.
இது தவிர, கம்பு பயி­ரிடும் பரப்பும், 36.97 லட்சம் ஹெக்­டே­ரி­ல் இ­ருந்து, 34.06 லட்சம் ஹெக்­டே­ராக குறைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, இதர உணவு தானி­யங்கள் பயி­ரிடும் பரப்பு, மதிப்­பீட்டு காலத்தில், 53.05 லட்சம் ஹெக்­டே­ரி­லி­ருந்து, 50.23 லட்சம் ஹெக்­டே­ராக சரி­வ­டைந்­துள்­ளது.அதே­ச­மயம், நடப்­பாண்டில் கொண்­டைக்­க­டலை பயி­ரிடும் பரப்பு, 85.29 லட்சம் ஹெக்­டே­ராக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்­த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது, 4.5 லட்சம் ஹெக்டேர் அதிகம் என, வேளாண் அமைச்­சகம் தெரி­வித்­துஉள்­ளது.கொண்­டைக்­க­டலைஒட்டு மொத்த அளவில், கடந்த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது, நடப்­பாண்டில், குளிர்­கால பயிர்­க­ளான கடுகு, கொண்­டைக்­க­டலை, மக்­காச் ­சோளம் ஆகி­ய­வற்றின் பயி­ரிடும் பரப்­ப­ளவு குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உயர்ந்­துள்­ளது. இதனால், நடப்­பாண்டில் தானி­யங்கள் உற்­பத்தி, சாதனை அளவை எட்ட வாய்ப்­புள்­ளது என, இத்­துறையைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)