பதிவு செய்த நாள்
16 டிச2013
04:32
புதுடில்லி: கோதுமை, பருப்பு வகைகள், மக்காச் சோளம், எண்ணெய் வித்துக் கள் உள்ளிட்டவற்றின் பயிரிடும் பரப்பளவு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதையடுத்து, நடப்பாண்டில் நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசம்இதற்கு சான்றாக, கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டில் இதுவரையிலுமாக, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், கோதுமை பயிரிடும் பரப்பளவு முறையே, 14.53 லட்சம் ஹெக்டேர் மற்றும் 12.65 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களிலும், கோதுமை பயிரிடும் பரப்பளவு முறையே, 4.95 லட்சம் ஹெக்டேர் மற்றும் 3.94 லட்சம் ஹெக்டேர் உயர்ந்துள்ளது.இதையடுத்து, உள்நாட்டில், இதுவரையிலுமாக, கோதுமை பயிரிடும் பரப்பளவு ஒட்டு மொத்த அளவில், 253.75 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்தில், 227.52 லட்சம் ஹெக்டேராக குறைந்து காணப்பட்டது.இதே போன்று, பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவும், 119.73 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 123.60 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், மக்காச் சோளம் பயிரிடும் பரப்பும், 8.75 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 9.18 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநிலத்தில், கடுகு பயிரிடும் பரப்பு, 2.41 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 29.73 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்த எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு, 75.85 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 77.78 லட்சம் ஹெக்டேராக சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.இருப்பினும், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, கடந்தாண்டை விட, நடப்பாண்டில், 3.21 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
இது தவிர, கம்பு பயிரிடும் பரப்பும், 36.97 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 34.06 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதையடுத்து, இதர உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பு, மதிப்பீட்டு காலத்தில், 53.05 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 50.23 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.அதேசமயம், நடப்பாண்டில் கொண்டைக்கடலை பயிரிடும் பரப்பு, 85.29 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 4.5 லட்சம் ஹெக்டேர் அதிகம் என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.கொண்டைக்கடலைஒட்டு மொத்த அளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், குளிர்கால பயிர்களான கடுகு, கொண்டைக்கடலை, மக்காச் சோளம் ஆகியவற்றின் பயிரிடும் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், நடப்பாண்டில் தானியங்கள் உற்பத்தி, சாதனை அளவை எட்ட வாய்ப்புள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|