பதிவு செய்த நாள்
17 டிச2013
00:26
புதுடில்லி: மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற நவம்பர் மாதத்தில், 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.வெங்காயம்இதற்கு முன், கடந்த 2012ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் தான், நாட்டின் பொதுப் பணவீக்கம், 8.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற அக்டோபரில் பொதுப் பணவீக்கம், 7 சதவீதமாகவும், செப்டம்பரில், மறு மதிப்பீட்டின்படி, 7.05 சதவீதமாகவும் இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், காய்கறிகளின் விலை, குறிப்பாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை மிகவும் அதிகரித்தது, பணவீக்க உயர்விற்கு வழிவகுத்துள்ளது.சென்ற நவம்பரில், காய்கறிகளின் விலை, 95.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய அக்டோபரில், 78.38 சதவீதம் என்ற அளவில் இருந்தது.இதே போன்று, கோதுமை, பருப்பு வகைகள், பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான ஒட்டு மொத்த பணவீக்கம், 18.19 சதவீதத்திலிருந்து, 19.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், வெங்காயத்தின் விலை, மிகவும் அதிகபட்சமாக, 190.34 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. எனினும், அக்டோபருடன் ஒப்பிடுகையில், இதன் விலை, சற்று குறைந்துள்ளது.முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றின் விலை 15.19 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மேலும், பால் விலையும், 6.25 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், மின்சாரம் மற்றும் எரிபொருட்களுக்கான பணவீக்கம், 11.08 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த அக்டோபரில், 10.33 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
தயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கம், 2.50 சதவீதத்திலிருந்து, 2.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதம்தொழில்துறை உற்பத்தி சுணக்கம் கண்டுள்ள நிலையில், நாட்டின் பணவீக்கமும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நாளை வெளியிட உள்ள அதன் காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை, மேலும், 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது என, சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|