பதிவு செய்த நாள்
18 டிச2013
00:14
புதுடில்லி:நடப்பு டிசம்பர், 13ம் தேதி நிலவரப்படி, ரபி பருவத்தில் பயிரிடப்பட்ட உணவு தானியங்களின் பரப்பளவு, 507 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 278 லட்சம் ஹெக்டேராக இருந்தது.நடப்பாண்டு ரபி பருவத்தில், கோதுமை பயிரிடும் பரப்பளவு, 254 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு, இதே காலத்தில், 228 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதே காலத்தில், பருப்பு வகைகளின் பயிர் பரப்பளவு, 120 லட்சத்தில் இருந்து, 124 லட்சம் ஹெக்டேராகஉயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 76 லட்சத்தில் இருந்து, 78 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. நெல் பயிரிடும் பரப்பளவு, 1.42 லட்சத்தில் இருந்து, 1.63 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், இதர தானியங்களின் பயிர் பரப்பளவு, 53.05 லட்சத்தில் இருந்து, 50.23 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|