பதிவு செய்த நாள்
19 டிச2013
00:26
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பார்லிமென்டில் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், இந்தியாவிலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு, 3,315 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,128 கோடி டாலராக இருந்தது.இதே போன்று, அமெரிக்காவிற்கான ஏற்றுமதியும், 2,149 கோடி டாலரிலிருந்து, 2,335 கோடி டாலர் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில், மேற்கண்ட இருநாடுகளின் பங்களிப்பு மட்டும், 25 சதவீதம் அளவிற்கு உள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|