பதிவு செய்த நாள்
19 டிச2013
00:29
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து இரண்டாவது நாளாக, சரிவடைந்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.02 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 9 காசுகள் குறைந்து, 62.11ல் நிலைகொண்டது.நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.90 ஆக, உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கை வெளியானது. அதில், வங்கிகளுக்கான 'ரெப்போ' விகிதங்களில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த தகவல் வெளியானதும், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு, 0.36 சதவீதம் உயர்ந்து, 61.79 வரை சென்றது.
அதே சமயம், அமெரிக்க மத்திய வங்கி வெளியிட உள்ள ஆய்வறிக்கையில், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.இதனால், டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர வழி வகுத்தது.அமெரிக்க டாலருக்கு நிகராக, மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யா, ஜப்பானின் யென் ஆகியவற்றை அடுத்து, இந்தியாவின் ரூபாய் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|