பதிவு செய்த நாள்
19 டிச2013
00:34
நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, நடப்பு 2013–14ம் நிதியாண்டின், ஏப்.,– நவ., வரையிலான, எட்டு மாதங்களில், 11 சதவீதம் சரிவடைந்து, 5.17 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற 2012–13ம் நிதியாண்டின் இதே காலத்தில், 5,83,200 டன்னாக இருந்தது.
பருவ மழை: இதுகுறித்து, ரப்பர் வாரிய தலைவர் ஷீலா தாமஸ் கூறுகையில்,"நடப்பு நிதிஆண்டில், இயற்கை ரப்பர் மொத்த உற்பத்தி, 8,70,000 டன்னை விஞ்சாது. இடைவிடாமல் பெய்த மழை மற்றும் வழக்கத்திற்கு மாறான இலை உதிர்வு போன்ற காரணங்களால், கடந்த நிதிஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாகவே இருக்கும்," என்றார்.
நடப்பு நிதியாண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 9,60,000 டன்னாகவும், அதற்கான தேவை, 10,20,000 டன்னாகவும் இருக்கும் என, ரப்பர் வாரியம் முன்னர் மதிப்பிட்டிருந்தது.இதன்படி, 60 ஆயிரம் டன் அளவிற்கு, இயற்கை ரப்பருக்கு பற்றாக்குறை ஏற்படும் என, தெரிகிறது.
பயன்பாடு: அதே சமயம், இயற்கை ரப்பர் உற்பத்தி, 8 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என, ரப்பர் தோட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 2012–13ம் நிதிஆண்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி, இதற்கு முந்தைய நிதிஆண்டை விட, 0.9 சதவீதம் அதிகரித்து, 9,12,000 டன்னாக இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட எட்டு மாதங்களில், இயற்கை ரப்பர் பயன்பாடும், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 2.3 சதவீதம் சரிவு அடைந்து, 6,48,530 டன்னாக குறைந்து உள்ளது.வழக்கமாக, அக்.,–டிச., மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி உச்சத்தில் இருக்கும். ஓராண்டின் மொத்த உற்பத்தியில், இந்த மூன்று மாதங்களின் பங்கு, 40 சதவீதம் என்ற அளவிற்கு இருக்கும்.
இறக்குமதி:ஆனால், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், மே தவிர்த்து, இதர மாதங்களில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்து காணப்பட்டது.சர்வதேச சந்தையில், இயற்கை ரப்பர் விலை குறைவாக இருந்ததால், கடந்த அக்டோபர் வரை, ரப்பர் சார்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து இயற்கை ரப்பரை இறக்குமதி செய்துகொண்டன. இதனால், உள்நாட்டில், இயற்கை ரப்பர் தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள பற்றாக்குறை ஓரளவு ஈடு செய்யப்பட்டது.
சிறிய நிறுவனங்கள்: ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை அதிகரிக்கத் துவங்கியதால், அதன் இறக்குமதியும் குறைந்து உள்ளது.நடப்பு டிசம்பர் மற்றும் வரும் ஆண்டு, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாகவே இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இயற்கை ரப்பர் உற்பத்தி குறைவால், அதை சார்ந்துள்ள, குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி குறையும் என, ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.எனினும், நாட்டில் 2,45,000 டன் இயற்கை ரப்பர் கையிருப்பு உள்ளதால், மிகப் பெரிய அளவிற்கு பிரச்னை எழாது என, ரப்பர் வாரியம் கணித்துஉள்ளது.
–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|