பதிவு செய்த நாள்
20 டிச2013
16:57
மும்பை : இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் கடைசி நாளில் முதலீட்டாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. சென்செக்ஸ் 371 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 21 ஆயிரத்தை தாண்டியது. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததன் விளைவாக வங்கி தொடர்பான பங்குகள் விலை உயர்ந்தது, அதிகளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்தது, குறிப்பாக எண்ணெய் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் அதிகம் எற்றத்தில் முடிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 371.10 புள்ளிகள் உயர்ந்து 21,079.72-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 107.6 புள்ளிகள் உயர்ந்து 6,274.25-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குளில் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டன. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்து இருந்தன. அதிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் இன்று ஒரேநாளில் 4.58 சதவீதம் உயர்ந்தது. அதற்கு அடுத்தப்படியாக எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, டிசிஎஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன பங்குகள் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|