பதிவு செய்த நாள்
21 டிச2013
00:19
புதுடில்லி:நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நவம்பரில், 14.60 சதவீதம் குறைந்து, 478 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
புள்ளிவிவரம்:இது, கடந்த அக்டோபர் மாதத்தில், 560 கோடி டாலராக இருந்தது.அதே சமயம் கடந்த, 2012ம் ஆண்டு நவம்பரில் காணப்பட்டதை விட, இந்தாண்டு நவம்பரில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 14.72 சதவீதம் உயர்ந்துள்ளது.'இத்தகைய புள்ளிவிவரத்தால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காணப்பட்ட வளர்ச்சி நீடித்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டு உள்ளது' என, இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் அனுபம் ஷா தெரிவித்துள்ளார்.
பொறியியல் ஏற்றுமதியில், கார், இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள், இரும்பு, உருக்கு, போக்குவரத்து சாதனங்கள் மற்றும் அணு ஈனுலைகள் மற்றும் விண்கலங்கள் உள்ளிட்டவை அடங்கும்.சென்ற நவம்பரில், மேற்கண்டவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 5.8 சதவீதம் குறைந்து, 2,460 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
அமெரிக்கா:அமெரிக்காவிற்கான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நவம்பரில், 47.50 கோடி டாலராக குறைந்தது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 51.40 கோடி டாலராக இருந்தது.அது போன்று, இதே காலத்தில், ஐரோப்பிய சந்தைகளுக்கான ஏற்றுமதியும், 28.70 கோடியில் இருந்து, 20 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
காலதாமதம்:ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, துறைமுகங்களில் காலதாமதத்தை தவிர்க்க, நிர்வாக ரீதியிலான நடவடிக்கை தேவை. மேலும், 7நடைமுறை இடர்பாடுகளை நீக்கவும், செலுத்தப்பட்ட வரியை திரும்ப வழங்கும் பணியை விரைவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பரிவர்த்தனை கட்டணம் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம், ஏற்றுமதி அதிகரிக்கும் என, அனுபம் ஷா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|