பதிவு செய்த நாள்
21 டிச2013
00:43

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதைஅடுத்து, சென்செக்ஸ்' 1.79 சதவீதம் மற்றும் 'நிப்டி' 1.74 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 371.10 புள்ளிகள் அதிகரித்து, 21,079.72 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,117.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,745.94 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., விப்ரோ உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட், சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.நிப்டி 107.60 புள்ளிகள் உயர்ந்து, 6,274.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,284.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,170.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|