பதிவு செய்த நாள்
23 டிச2013
10:00
மும்பை : ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று(டிசம்பர் 23) வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய பங்குச் சந்தைகளில் நல்லதொரு முன்னேற்றம் காரணப்படுகிறது. வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்து 21,173 புள்ளிகளாகவும், நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 6300 புள்ளிகள் என்ற அளவை எட்டி உள்ளன.
இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருப்பதும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தைகள் ஏற்றமுடன் துவங்கியதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு உற்பத்தியும் கடந்த 2 ஆண்டுகளாக வேகமாக உயர்ந்தாக இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து வர்த்தக முன்பை விட வலுப் பெற்றுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றமடைந்து வருகின்றன.
அமெரிக்க பங்குச் சந்தை மட்டுமின்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, உலோகம், மின்துறை, ஆட்டோ, ஆயுள் காப்பீடு, வங்கிகள் ஆகிய முக்கிய துறைகளின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|