பதிவு செய்த நாள்
24 டிச2013
02:10
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3,07,568 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2,93,145 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 5 சதவீத அளவிற்கு மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மறைமுக வரியின் கீழ், உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி,சுங்க வரி, சேவை வரி உள்ளிட்டவை அடங்கும்.நாட்டின் தொழில்துறை உற்பத்தி சுணக்கம் கண்டுள்ளதை எடுத்துக்காட்டும் வகையில், மதிப்பீட்டு காலத்தில், உற்பத்தி வரி, 5.1 சதவீதம் சரிவடைந்து, 1,03,629 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1,09,180 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.அதேசமயம், சேவை வரி வசூல், 16 சதவீதம் அதிகரித்து, 92,095 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், சுங்க வரி வசூலும், 7 சதவீதம் உயர்ந்து, 1,11,844 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், 4.73 லட்சம் கோடி ரூபாயாகஇருந்த மறைமுக வரி வசூலை, நடப்பு நிதியாண்டில், 5.65 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|