பதிவு செய்த நாள்
26 டிச2013
00:17
புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, 14.80 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 14.43 கோடிடன்னாக இருந்ததுஎன, பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், சென்ற நவம்பரில், நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, 1.78 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 1.87 கோடி டன்னாக இருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2.52 கோடி டன்னாக சற்று குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 2.54 கோடி டன்னாக இருந்தது.சென்ற நவம்பரில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 31.40 லட்சம் டன்னாக இருந்தது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 31 லட்சம் டன்னாக காணப்பட்டது.கணக்கீட்டு காலத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 2,805 கோடி கன மீட்டரிலிருந்து, 2,368 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்திலும் இதன் உற்பத்தி, 326 கோடி கன மீட்டரிலிருந்து, 289 கோடி கன மீட்டராக சரிவடைந்துள்ளது.
நடப்புநிதியாண்டின் நவம்பர் வரையிலான எட்டுமாத காலத்தில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, 10.41 கோடிடன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 10.35 கோடி டன்னாக இருந்தது.சென்ற நவம்பர் மாதத்தில், பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு, அதிக ஏற்ற இறக்கமின்றி, 133 லட்சம் டன் என்ற அளவில் அதிக மாற்றமின்றி இருந்தது என, பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|