பதிவு செய்த நாள்
26 டிச2013
13:58
உயர் வருவாய் பிரிவினர் வசதிக்காக, சென்னை, வேளச்சேரியில் உள்ள, பீனிக்ஸ் மாலில், நவீன டாஸ்மாக் கடை துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6 ஆயிரத்து 834 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில், "குடிமகன்'கள் கூட்டம் நிரம்பி வழிவதால், உயர் வருவாய் பிரிவினர், தங்களுக்கு பிடித்த மது வகைகள் வாங்குவதில் சிரமப்பட்டு வந்தனர். இவர்களின் வசதிக்காக, டாஸ்மாக் நிறுவனம், பார் வசதி இல்லாமல், ஷாப்பிங் மால்களில், நவீன கடைகள் துவக்க திட்டமிட்டு, முதல் கடையை, சென்னை எழும்பூரில் உள்ள, அல்சா மாலில் திறந்துள்ளது.
இந்த கடையில், இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் பிரிமியம் ரக மது வகைகள் விற்கப்படுகின்றன. இதனால், கடை துவங்கிய சில நாட்களில், அனைத்து பிரிவினரிடமும் அமோக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, சென்னை, வேளச்சேரியில் உள்ள, பீனிக்ஸ் மாலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 800 சதுர அடியில், நவீன டாஸ்மாக் கடை (எண்: 957) துவக்கப்பட்டுள்ளது. இந்த கடையில், குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலான அனைத்து வகையான, மது வகைகளும் விற்கப்படுகின்றன.
மூன்று மால்களில் முழுவீச்சில் பணிகள் : தேனாம்பேட்டை ரமி மால்; அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா; கோயம்பேடு டென் ஸ்கொயர் ஆகிய மால்களில், டாஸ்மாக் கடை துவக்குவதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மால்களில், புத்தாண்டு அன்று, கடைகள் செயல்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|