பதிவு செய்த நாள்
27 டிச2013
02:00
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, 11 நலிவு அடைந்த நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, 116.86 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
நலிவடைந்த, 11 பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளம் உள்ளிட்ட நிலுவை தொகையை வழங்கும் வகையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்அளித்துஉள்ளது.
இதன்படி, நடப்பாண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான, 5 மாத காலத்திற்கு, சம்பளம் உள்ளிட்ட நிலுவை தொகை வழங்கும் வகையில், இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக, மத்திய அரசின் பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிதிஉதவி, இந்துஸ்தான் கேபிள்ஸ், எச்.எம்.டி. மெஷின் டூல்ஸ், எச்.எம்.டி. (வாட்சஸ்), எச்.எம்.டி. (சினார் வாட்சஸ்), நாகாலாந்து பல்ப் அண்டு பேப்பர், திரிவேதி ஸ்ட்ரக்சுரல்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ், நேபா நிறுவனம், எச்.எம்.டி. பேரிங்க்ஸ், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் மற்றும் டயர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|