பதிவு செய்த நாள்
29 டிச2013
03:14
புதுடில்லி:பொது துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களில், கடந்த நவம்பரில் நிலக்கரி உற்பத்தி, இலக்கை விட குறைந்துள்ளது.கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ், நார்த் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ், பாரத் கோக்கிங் கோல், ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ், வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ், சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ், மகாநதி கோல் பீல்ட்ஸ், சவுத் ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் ஆகிய, 8 துணை நிறுவனங்கள் உள்ளன.நடப்பாண்டு, நவம்பரில், எட்டு துணை நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தியை, 4.19 கோடி டன்னாகவும், விற்பனையை, 4.16 கோடி டன்னாகவும் இருக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால், மதிப்பீட்டு மாதத்தில், மேற்கண்ட நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி, 3.92 கோடி டன்னாகவும், விற்பனை, 3.87 கோடி டன் என்ற அளவிலும், இருந்தது என, கோல் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|