பதிவு செய்த நாள்
30 டிச2013
17:21
மும்பை : வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. கடந்த மூன்று நாட்களில் நடந்த பங்குசந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் வரை உயர்ந்து இருந்த நிலையில், ஐடி., மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் விலை உயர்ந்து இருந்ததால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு விற்க தொடங்கினார். இதனால் ஏற்றத்தில் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 50.57 புள்ளிகள் சரிந்து 21,143.01-ஆகவும், நிப்டி 22.70 புள்ளிகள் சரிந்து 6,291.10-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில், இன்போசிஸ், ஐசிஐசிஐ., எல்அண்ட்டி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், பெல், கோல் இந்தியா உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|