சமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வுசமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வு ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.26 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.26 ...
8.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், 20% சம்பள உயர்வு - புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2014
16:42

புதுடில்லி : புத்தாண்டில் வேலைவாய்ப்பு மழையை ஏற்படுத்தி இளைஞர்களை மகிழ்விக்க இந்திய கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. 2014ம் ஆண்டில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவும், சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

2013ம் ஆண்டில் குறைவான வளர்ச்சி கண்ட வேலைவாய்ப்பு சந்தையை உயர்த்தவும், இடைநிலை மற்றும் உயர்பதவி காலியிடங்களையும் நிரப்புவதற்காக மனிதவள மேம்பாட்டு ஆலோசனை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் விளைவாக புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டமிட்டுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால் வேலைவாய்ப்பு துறையை வளர்ச்சி பெற செய்வதற்காக உலக சந்தையில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்திருப்பதாக குளோபல்ஹன்ட் நிறுவன தலைவர் சுனில் கோயல் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ஐடி, ஆயுள் காப்பீடு, வேளாண் வணிகம், உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகளை செய்வதற்காக வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே சம்பள உயர்வு ஏற்படுத்தப்படுவதால், 2014ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கவும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தொழிற்துறைகளில் குறைந்தபட்சம் 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)