பதிவு செய்த நாள்
07 ஜன2014
15:07
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 'காஸ்' ஏஜென்சிகள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும், 19ம் தேதியிலிருந்து, காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. சமையல், 'காஸ்' சப்ளை செய்யும், ஏஜென்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், நாடு முழுவதும், புதிதாக டீலர்களை நியமிக்கப் போவதாக, விளம்பரம் வெளியிட்டுள்ளன. பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதியின்றி, இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1,500 புதிய டீலர்களை நியமிக்கப் போவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கிராமப்புறங்களில், சமையல் காஸ் எளிதாகக் கிடைப்பதற்காக, 5,000 டீலர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மேலும், பல டீலர்களை நியமிப்பதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், வரும், 19ம் தேதியிலிருந்து, காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|