பதிவு செய்த நாள்
07 ஜன2014
15:14
மதுரை: இரு வழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் அனுமதி கிடைத்ததும், மதுரை-மலேசியா இடையே நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது. சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட மதுரையில் இருந்து, இலங்கை, துபாய்க்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பல வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் தயாராகவுள்ளன. மலேசியா-இந்தோனேஷியா கூட்டு நிறுவனமான மலிண்டோ ஏர், கடந்த டிச., 30 முதல் டில்லி, ஜன., 2 முதல் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியாவின் மேலும் பல நகரங்களில் இருந்து நேரடி விமானங்களை இயக்கவும் முயற்சித்து வருகிறது. அதன் வர்த்தக மேலாளர் யோகநாதன் நேற்று மதுரை விமான நிலைய அதிகாரி சங்கையாபாண்டியனை சந்தித்து ஆலோசித்தார்.
தமிழ்நாடு இ-டிக்கட் ஏஜன்ட்கள் நலச்சங்க நிர்வாகிகள் கண்ணன், ஜாகீர் உசேன் மற்றும் சிலரை சந்தித்தார். அப்போது யோகநாதன் பேசுகையில், ''மலிண்டோ ஏர், பிப்., 15 முதல் மும்பை, மார்ச் 19 முதல் ஆமதாபாத்திலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்களை இயக்கவுள்ளது. மதுரையிலிருந்து விமானம் இயக்க பரிசீலிக்கிறோம். இரு வழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் மலேசியாவிற்கு மதுரையிலிருந்து விமானத்தை இயக்க அனுமதி கிடைத்தவுடன் விமானம் இயக்கப்படும்,'' என்றார்.
இ-டிக்கெட் ஏஜென்ட்கள் கூறுகையில், ''தென் மாவட்டத்தினர் அதிகளவில் மலேசியாவில் பணிபுரிகின்றனர். தற்போது அவர்கள் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் வழியாக மலேசியா செல்ல வேண்டியுள்ளது. மதுரை-மலேசியா நேரடி விமானம் இயக்கினால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|