காலவரையற்ற 'ஸ்டிரைக்': 'காஸ்' ஏஜென்சி அறிவிப்புகாலவரையற்ற 'ஸ்டிரைக்': 'காஸ்' ஏஜென்சி அறிவிப்பு ... மானிய சிலிண்டர் உயர்வு: இல்லை என்கிறது அரசு மானிய சிலிண்டர் உயர்வு: இல்லை என்கிறது அரசு ...
மதுரை-மலேசியா விமானம் : விரைவில் இயங்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2014
15:14

மதுரை: இரு வழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் அனுமதி கிடைத்ததும், மதுரை-மலேசியா இடையே நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது. சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட மதுரையில் இருந்து, இலங்கை, துபாய்க்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பல வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் தயாராகவுள்ளன. மலேசியா-இந்தோனேஷியா கூட்டு நிறுவனமான மலிண்டோ ஏர், கடந்த டிச., 30 முதல் டில்லி, ஜன., 2 முதல் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியாவின் மேலும் பல நகரங்களில் இருந்து நேரடி விமானங்களை இயக்கவும் முயற்சித்து வருகிறது. அதன் வர்த்தக மேலாளர் யோகநாதன் நேற்று மதுரை விமான நிலைய அதிகாரி சங்கையாபாண்டியனை சந்தித்து ஆலோசித்தார்.

தமிழ்நாடு இ-டிக்கட் ஏஜன்ட்கள் நலச்சங்க நிர்வாகிகள் கண்ணன், ஜாகீர் உசேன் மற்றும் சிலரை சந்தித்தார். அப்போது யோகநாதன் பேசுகையில், ''மலிண்டோ ஏர், பிப்., 15 முதல் மும்பை, மார்ச் 19 முதல் ஆமதாபாத்திலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்களை இயக்கவுள்ளது. மதுரையிலிருந்து விமானம் இயக்க பரிசீலிக்கிறோம். இரு வழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் மலேசியாவிற்கு மதுரையிலிருந்து விமானத்தை இயக்க அனுமதி கிடைத்தவுடன் விமானம் இயக்கப்படும்,'' என்றார்.

இ-டிக்கெட் ஏஜென்ட்கள் கூறுகையில், ''தென் மாவட்டத்தினர் அதிகளவில் மலேசியாவில் பணிபுரிகின்றனர். தற்போது அவர்கள் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் வழியாக மலேசியா செல்ல வேண்டியுள்ளது. மதுரை-மலேசியா நேரடி விமானம் இயக்கினால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)