பதிவு செய்த நாள்
07 ஜன2014
16:43
மும்பை : தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன. கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 7ம் தேதி) சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றத்துடன் தான் இந்திய பங்குசந்தைகள் துவங்கின. ஆனால் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு 94.06 புள்ளிகள் சரிந்து 20,693.24-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 29.20 புள்ளிகள் சரிந்து 6,162.25-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் மாருதி சுசூகி, எல்அண்ட்டி, பெல், ஐடிசி உள்ளிட்ட 12 நிறுவன பங்குகள் விலை லாபமும், இன்போசிஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ், டாடா பவர், ஹிண்டால்கோ உள்ளிட்ட 18 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|