மொத்த விற்பனைக்கான டீசல் விலை குறைகிறதுமொத்த விற்பனைக்கான டீசல் விலை குறைகிறது ... தங்க நகைக்கு அதிக கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி தங்க நகைக்கு அதிக கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி ...
ஐ.ஓ.சி., பங்கு விற்பனை திட்டம் ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
12:25

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான, முக்கிய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஐ.ஓ.சி.யின் பங்கு விற்பனைக்கு, பெட்ரோலிய அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக, இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, ஐ.ஓ.சி.,யில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 18ம் தேதி, ஐ.ஓ.சி., நிறுவன பங்கின் விலை, 375 ரூபாயாக இருந்தது. இது, நேற்றைய நிலவரப்படி, 199 ரூபாய் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 48 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. என்றாலும், இந்நிறுவனத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கொண்டுள்ள, 7.69 சதவீத பங்கு மூலதனத்தை குறைத்து மதிப்பிட்டால், ஐ.ஓ.சி., நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது.

இந்நிலையில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் போது, இதன் பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் குறைந்து விடும். ஐ.ஓ.சி., நிறுவனம், ஒடிசா மாநிலம் பாரதீப்பில், 1.50 கோடி டன் திறனில், சுத்திகரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. அந்த முதலீட்டு மதிப்புடன் ஒப்பிடும் போது, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே, ஐ.ஓ.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டம் ஒத்தி போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)