பதிவு செய்த நாள்
10 ஜன2014
13:01
புதுடில்லி: வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்க நகைகளின் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல நிதி நிறுவனங்கள், தங்க நகைகளின் மதிப்பில், 80 - 90 சதவீதம் வரை கடன் வழங்கி வந்தன. இந்நிலையில், தங்கம் விலை குறையத் துவங்கியது.
இதனால், பல நிறுவனங்கள் அடகு வைத்த நகைகளுக்கு வழங்கிய கடனை விட, அவற்றின் மதிப்பு குறைந்தது. இதையடுத்து, பல நிறுவனங்கள், அடமானதாரர்களிடம் இருந்து கூடுதல் தொகையை கோரின. அதற்கு முன்வராதவர்களின் அடமான நகைகள் விற்பனை செய்யப்பட்டன.இது போன்ற இடர்பாடுகளை அடமானதாரர்கள் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்திலும், வங்கிகளின் தங்க நகை கடன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தவும், ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் மாதம், நிதி நிறுவனங்கள், தங்க நகைகளின் மதிப்பில், 60 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இந்நிலையில், கே.யு.பீ.ராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைப்படி, தற்போது, நகைகளின் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி, வங்கி சாரா நிதி நிறுவனங்களில், நகைகளின் பேரில், கூடுதலாக, 15 சதவீத தொகையை கடனாக பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|