பதிவு செய்த நாள்
23 ஜன2014
12:39
கார் சாவியை மறந்து, அங்கங்கு வைத்துவிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. மொபைல் போனை எங்காவது வைத்து விட்டால், தேடும் நேரத்தை தவிர்க்க வேறு போனிலிருந்து, "மிஸ்டு கால்' கொடுக்கலாம். ஆனால் சாவி காணவில்லை என்றால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். தொலைத்த சாவியை கண்டுபிடிக்க, "கீ கார்ட்' மற்றும் கீ செயின் கொண்ட கீபைண்டர் இதற்கு உதவும். "கீ கார்ட்டை' பர்ஸ் அல்லது கை பையில் வைத்துக் கொள்ள வேண்டும். சாவியை தேட "கார்ட்'டில் உள்ள சுவிட்சை அழுத்த வேண்டும். உடனே கீ செயின் "பீப் பீப்' என்ற சத்தத்தையும், அதனுடன் ஒரு லைட்டும் எரியும். இந்த ஒலி, ஒளியைக் கொண்டு சாவியை கண்டுபிடித்து விடலாம். இந்த "கீ கார்ட்' மெல்லியதாக, "கிரெடிட் கார்ட்' அளவில் தான் இருக்கும். கப்போர்ட், ட்ராயர், தலையணைக்கு அடியில், என்று குறிப்பிட்ட தூரம் வரை எங்கு ஒளிந்திருந்தாலும், கார் சாவியை நாம் கண்டு பிடித்து விடலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|