பதிவு செய்த நாள்
25 ஜன2014
01:47
மும்பை:ஏ.டி.எம்., மையங்களின் பராமரிப்பு செலவைக் குறைக்க, மின்சேமிப்பு சார்ந்த மின்னணு தொழில்நுட்பபாதுகாப்பு வசதியை, ஸிகாம்சாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், ஏ.டி.எம்., மையங்கள், இணையதளம் வழியாக, 24 மணி நேரம் கண்காணிக்கப்படும். இந்த மையங்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். மேலும், பசுமை தொழில்நுட்பம் காரணமாக, இந்த மையங்களுக்கான மின் செலவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மிச்சமாகும்.
இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை, வங்கிகள், ஏ.டி.எம்., பாதுகாப்பிற்கான, தொலைதூர கண்காணிப்பு சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனால், இம்மையங்களின் கூடுதல் பாதுகாப்பிற்கான செலவினமும், வங்கிகளுக்கு மிச்சமாகும். ஒரு ஏ.டி.எம்., மையத்தின், இருபாதுகாப்பு பணியாளர்களுக்கு செலவிடுவதை விட, குறைந்த தொகையே மேற்கண்ட புதிய நடைமுறையில் செலவாகும்.
பெங்களூரு ஏ.டி.எம்.,யில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இது போன்ற மையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, பல மாநில அரசுகள் வங்கி களிடம் தெரிவித்துள்ளன.இதனால், தற்போது, மாதம், 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ள, ஒரு ஏ.டி.எம்., மையத்தின் பாதுகாப்பு செலவு, 40 ஆயிரம் ரூபாயாக உயரும் என, தெரிகிறது. இச்செலவை ஈடுகட்ட, வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களிடமே, ஏ.டி.எம்., மையங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், புதிய பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தினால், வங்கிகளின், ஏ.டி.எம்., பராமரிப்பு செலவினம் உயராது; வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு இருக்காது என, ஸிகாம் சாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|