தங்கம் விலை ரூ.56 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.56 உயர்ந்தது ... "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்'   "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்' ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏ.டி.எம்., மைய செலவை குறைக்க புதிய வழிவங்கி வாடிக்கையாளர்கள் பயனடைவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2014
01:47

மும்பை:ஏ.டி.எம்., மையங்களின் பராமரிப்பு செலவைக் குறைக்க, மின்சேமிப்பு சார்ந்த மின்னணு தொழில்நுட்பபாதுகாப்பு வசதியை, ஸிகாம்சாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், ஏ.டி.எம்., மையங்கள், இணையதளம் வழியாக, 24 மணி நேரம் கண்காணிக்கப்படும். இந்த மையங்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். மேலும், பசுமை தொழில்நுட்பம் காரணமாக, இந்த மையங்களுக்கான மின் செலவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மிச்சமாகும்.
இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை, வங்கிகள், ஏ.டி.எம்., பாதுகாப்பிற்கான, தொலைதூர கண்காணிப்பு சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனால், இம்மையங்களின் கூடுதல் பாதுகாப்பிற்கான செலவினமும், வங்கிகளுக்கு மிச்சமாகும். ஒரு ஏ.டி.எம்., மையத்தின், இருபாதுகாப்பு பணியாளர்களுக்கு செலவிடுவதை விட, குறைந்த தொகையே மேற்கண்ட புதிய நடைமுறையில் செலவாகும்.
பெங்களூரு ஏ.டி.எம்.,யில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இது போன்ற மையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, பல மாநில அரசுகள் வங்கி களிடம் தெரிவித்துள்ளன.இதனால், தற்போது, மாதம், 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ள, ஒரு ஏ.டி.எம்., மையத்தின் பாதுகாப்பு செலவு, 40 ஆயிரம் ரூபாயாக உயரும் என, தெரிகிறது. இச்செலவை ஈடுகட்ட, வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களிடமே, ஏ.டி.எம்., மையங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், புதிய பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தினால், வங்கிகளின், ஏ.டி.எம்., பராமரிப்பு செலவினம் உயராது; வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு இருக்காது என, ஸிகாம் சாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)