பதிவு செய்த நாள்
25 ஜன2014
01:49
மும்பை:நாட்டின் பங்குவியாபாரம், வாரத்தின் கடைசிவர்த்தக தினமான நேற்று, மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால்,இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பாமற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 240.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 21,133.56 புள்ளிகளில் நிலைபெற்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., டாட்டா மோட்டார்ஸ், சேசா ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின்விலை சரிவடைந்தும், என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 78.90 புள்ளிகள் சரிவடைந்து, 6,266.75 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|